2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால், பொருளாதாரம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகள் மனிதனை உலுக்குகின்றன. 2025ல் எந்த 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். சனி பகவான் 2025ம் ஆண்டில் ராசியை மாற்றப் போகிறார். இந்த வருடம் கும்ப ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்கு பிரவேசிப்பார். சனியின் இந்த ராசி மாற்றத்தால், மகர ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுபடுவார்கள்.
ஏழரை சனி:
ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனி நடைபெறும். இதில் விரைய சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது.
மேஷம்:
மீன ராசியில் சனி நுழைந்தவுடன் மேஷ ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். இதனால், பொருளாதார நிலை மோசமடையத் தொடங்கும். வருமானம் உயராது ஆனால் செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலை மிகவும் பலவீனமாகிவிடும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். இது தவிர உடல் உபாதைகளும் பாடாய் படுத்தும். குடும்ப வாழ்க்கையிலும் பதற்றம் அதிகரிக்கும். மனதில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்
கும்பம்:
மார்ச் 29, 2025 முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு கடைசிக் கட்டமான பாத சனி தொடங்கும். இதனால், பணப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக நீங்கள் வேலையில் இடமாற்றத்தைக் காணலாம். மிகவும் கடினமாக உழைத்தாலும், உங்கள் உழைப்பின் பலனைப் பெற முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் கெடும். காயங்கள், இடுப்பு, முதுகு வலி அல்லது முழங்கால்களில் சளி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மீனம்:
2028 வரை ஏழரை நாட்டு சனி மீனத்தில் நீடிக்கிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். முதல் கட்டத்தில், மீனம் ராசிக்காரர்கள் செல்வம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்குப் பிறகு உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருக்கும். உடல்நலம் மோசமடைவதால், மீன ராசிக்காரர்களின் மனதில் எதிர்மறை உணர்வுகள் ஊடுருவக்கூடும். பொருளாதார நிலை பலவீனமடையும். பண இழப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். இது தவிர புதிய வேலை தேடும் மீன ராசிக்காரர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகும் அது கிடைக்காது.
ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்
சனிபகவான் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதால், மனம் மகிழ்வார். மேலும், சனி பகவான் தொழிலாளர் வர்க்கத்தின் நீதிக் கடவுளாக கருதப்படுவதால், எந்தவொரு தொழிலாளர் வர்க்கத்தையும் அல்லது துப்புரவுத் தொழிலாளியையும் அவமதிக்காதீர்கள். துப்புரவு பணியாளர்களுக்கு சனிக்கிழமை நன்கொடை வழங்க வேண்டும். சனிக்கிழமையன்று எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும். சனிக்கிழமையன்று அரச மரத்தில் எள் எண்ணெயைத் தடவவும், இந்த பரிகாரம் மூலம் ஏழரை சனியின் தாக்கங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனி தோஷம் நீங்கும்.