
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும்.மனிதர்கள் சிறுநீர் கழிப்பது ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அவசியமாக இருக்கின்றது. ஆனால் தினமும் எத்தனை முறை சிறுநீர் கழிக்கின்றோம் என்பதில் நிச்சயம் கவனம் வேண்டும்.ஆனால் அதிகளவு சிறுநீர் கழிப்பது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக இரவில் சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலால் அடிக்கடி விழித்திருப்பது அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
நோக்டூரியா எனப்படும் இந்த நிகழ்வு, உங்கள் தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை கணிசமாகக் பாதிக்கும்.இந்த பதிவில் எந்தெந்த உடல்நல பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இவை நொக்டூரியா நோயின் தாக்கமாகும்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தால்
நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை ஏற்படும். இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையை உங்களது சிறுநீரில் சேர்ப்பதால், சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்புகின்றது. இதனால் சிறுநீர் கழிக்க அடிக்கடி இரவில் எழும்ப வேண்டியுள்ளது.UTI கள் உங்கள் சிறுநீர்ப்பையை அடிக்கடி காலி செய்ய விரும்பும் எரிச்சலூட்டும் போக்கைக் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுத்தும். சில நேரங்களில், இந்த நோய்த்தொற்றுகள் இரவில் நொக்டூரியாவை ஏற்படுத்தும். ஆதலால் விரைவில் இதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
அதிகமாக வேலை செய்யும் சிறுநீர்ப்பையும் சிறுநீர் கழிக்கும் தொந்தரவை ஏற்படுத்துகின்றது. இதிவும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். ஆண்களைப் பொறுத்தவரை, புரோஸ்டேட் சில நேரங்களில் வீக்கமடைந்து வழக்கமான சிறுநீர் ஓட்டத்தில் பிரச்சினை ஏற்படுகின்றது.இதய பிரச்சினை உள்ளவர்களுக்கும் இம்மாதிரியான நொக்டூரியா பிரச்சினையும் ஏற்படும்.
டையூரிடிக்ஸ் அல்லது தண்ணீர் மாத்திரைகள் போன்ற சில மருந்துகள் சிறுநீர் உற்பத்தியைத் தூண்டி நொக்டூரியாவை ஏற்படுத்தும்.தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீங்கள் தூங்கும் போது உங்கள் சுவாசத்தில் தலையிடும் ஒரு தூக்கக் கோளாறு. இதுவும் இந்த சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.



