நடிகை வனிதா இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார்.
நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று வனிதா தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதற்காக குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார்.
செல்வதற்கு முன்பு அவ்வப்போது அரங்கேறிய குறும்புத்தனத்தினையும் காணொளியாக வெளியிட்டிருந்தார்.
வனிதாவின் பிறந்தநாளுக்கு அவரது மகள்கள் அளித்த பரிசு என்ன என்பதை வனிதா தற்போது கூறியுள்ளார்.



