கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முன்னர் தகவல் வெளியானது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சற்று நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை ஒரு நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள் என அவரின் மகன் சரண் நேற்று கூறினார்.
இந்த நிலையில் பாடகர் எஸ்பிபி-க்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
தன்னுடைய காந்த குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த எஸ்பிபி-க்கு அவரது குரலே சிகிச்சைக்கு உதவுவது நெகிழ்ச்சியளிப்பதாக சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



