பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டும் பிக்பாஸில் டைட்டில் வின்னர் தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தனின் கருத்து
இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இடம்பெற்ற ஜேம்ஸ் வசந்தன் பிக்பாஸ் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

தமிழில் சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது ட்ரெண்டாக உள்ள விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா அடிக்கடி சென்று வருவதுடன் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். இந்நிலையில் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விசித்திரா குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது- பிக்பாஸ் பட்டத்தை வென்று வெளியே போய் ஒரு அந்தஸ்துடன் இருப்பவருக்கு ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும்.
இருப்பவர்களில் ஒப்பீட்டு அடிப்படையில் விசித்திரா, மணி, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா என்று இவர்களை பார்க்கும்போது, யார் சிறந்த ரோல் மாடலாக இருப்பார்கள் என்று பார்க்கும்போது விசித்திராவுக்கு டைட்டில் வழங்கலாம்.

விசித்திராவை பார்த்து யாராவது ஒரு விஷயத்தில் கெட்டுப் போய் விடுவார்களா? அவரிடம் குறைவான தவறுகள் உள்ளது.
எனவே அவருக்குத்தான் பட்டம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.



