‘மசாலாக்களின் ராஜா’ என்றாலே அது மஞ்சள் தான் என்று கூறலாம். சாம்பார் முதல் பல்வேறு உணவுகளில் நாம் மஞ்சளை சேர்த்துக் கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
மஞ்சள் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் சொல்ல தேவையில்லை.
எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும். சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தபடாத பதார்த்தமே இல்லை என கூறலாம்.
இருப்பினும் அளவுக்கு அதிகமான மஞ்சள் உங்கள் உடல்நலத்தை சீர்குலைத்துவிடும் என இன்றைய வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உண்டாக்கும். மஞ்சளினால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி பார்க்கலாமா?
உங்களுக்கு இந்திய மசாலாக்கள் அலர்ஜி என்றால், மஞ்சள் பயன்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மஞ்சள் உங்கள் அலர்ஜியை அதிகரிக்கவே செய்யும்.
ஈரல் பிரச்சனைகள்
ஈரல் வீக்கம் அல்லது பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் மஞ்சளை எடுத்துக் கொள்ள கூடாது. மஞ்சள் பொடியில் உள்ள குணங்கள் தற்போதிருக்கும் ஈரல் பிரச்சனைகளை மோசமடைய செய்யும்.
சக்கரை நோயாளிகள்
சர்க்கரை நோய்க்கு ஓரளவிற்கு மஞ்சள் நன்மையை செய்தாலும் கூட, அதிகமாக எடுத்துக் கொண்டால் குழப்பமே நீடிக்கும். இவர்கள் ஏற்கனவே மருந்து உட்கொண்டு வந்தால், ஹைபோகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவு) ஏற்படவும் செய்யும்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தானது
அளவுக்கு அதிகமான மஞ்சள் இரத்த உறைதல் செயல்முறையை தடுக்கும். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது.



