திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி. ஆகவே, திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதல் அடி :
பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாவது அடி :
ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாவது அடி :
நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி :
சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி :
லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.
ஆறாவது அடி :
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி :
தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூசகமான மனோவியல் விஷயத்தை உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.



