பிக்பாஸில் தற்போது போட்டியாளர்களுக்கு லக்சரி பட்ஜெட் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிக்பாஸ் கூறும் டாஸ்க்குகளை முடிப்போர் விருப்பப்படும் பொருள் மற்றும் உணவு பொருள்களை தங்களது பாய்ண்ட்டிற்கு ஏற்றப்படி பெற்று கொள்ளலாம்.
அந்த வகையில் வனிதாவிற்கு கொலைக்காரி டாஸ்க் கொடுக்க, அந்த டாஸ்க்கிற்காக சாக்ஷியின் மேக்கப்பை கலைத்து விடுகிறார். ஆனால் இதை அறியாத சாக்ஷி, தலைவரான பின் அபிராமி தான் இதுபோன்ற காரியங்களை செய்கிறார் என வனிதாவிடம் கூறுகிறார்.
ஆனால் வனிதாவோ அபிராமி இல்லை, எனக்கு என்னவோ லொஸ்லியா மீது தான் சந்தேகமாக உள்ளது என தனது டாஸ்க்கை முடிப்பதற்காக தான் செய்த தவறை லொஸ்லியா மீது திணிக்கிறார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட போகின்ற பிரச்சனைகளை விரைவில் காணலாம்.



