கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மக்களால் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். வாக்கு எண்ணிக்கையில் முன்னே இருந்தவர் ஒரே இரவில் ஏற்பட்ட சரிவால் வெளியேறினார்.
இதற்குக் காரணம் சேரன் மீது இவர் வைத்த குற்றச்சாட்டே… இதனை கடந்த வாரம் கமல் குறும்படம் போட்டு தலைகுனிய வைத்தார். ஆனாலும் சமாதானம் ஆகாத மீரா மீண்டும் சேரன் மீதே குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.
மீரா மிதுன் வெளியே வந்தாலும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போதும், பிக்பாஸ் வீட்டில் சேரன் ஒரு இயக்குநராகவே நடந்து கொள்வதாகவும், தன்னை கருப்பு கருப்பு என மட்டம் தட்டியதாகவும், தாழ்வுமனப்பான்மை உடையவர் எனக் கூறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில், சேரன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால் ஆத்திரமடைந்த சேரனின் மனைவி செல்வராணி, அவரை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மீராவை அவர் அடித்ததாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் செய்தி வைரலாகி இருக்கிறது.
இது தொடர்பாக சேரன் மனைவி செல்வராணியோ அல்லது மீராவோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தால் தான் இது முடிவுக்கு வரும் என்று கூறப்படுகின்றது.



