தங்களது குழந்தைகளை இன்று கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த பின்பு நிர்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை நாம் கண்கூடாக அவதானித்து வருகிறோம்.
நமக்காகவே கஷ்டப்பட்டு நமது தேவைகளை சந்திக்க வைத்துவிட்டு நமது முகத்தில் ஆனந்தத்தை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் வயதான பின்பு அவர்களை ஏன் நாம் மறந்துவிடுகிறோம்.
சாகும் வரை நம் தாய் தந்தையை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முடையது என்பதை மிகத தெளிவாக விளக்கியுள்ளது இந்த சிறுவர்களின் நடிப்பு… இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் அவலநிலை இதுவே என்பதை மிகவும் அழகாக காட்டியுள்ளனர். இவர்களின் நடிப்பை அவதானித்த நடுவர்கள் மட்டுமின்றி அரங்கமும், பார்வையாளர்களும் கூட கண்ணீர் சிந்தியுள்ளனர்.


