இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் தீபாவளிக்கு முன்னும், பின்னும் சில கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதுவும் நீதிமான் சனி பகவானும், தேவகுருவான குருபகவானும் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளனர். அதாவது அக்டோபர் 09 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து தீபாவளி முடிந்து 15 நாட்கள் கழித்து சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.
இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக அந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்துடன் நிதி ஆதாயங்களும் கிடைக்கப் போகின்றன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
குரு மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தீபாவளிக்கு பின் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். முக்கியமாக உங்கள் பேச்சால் பல வேலைகள் சிறப்பாக முடிவடையும்.
மேஷம்
குரு மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தீபாவளிக்கு பின் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்பு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருந்தால், தீபாவளிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட சிறப்பாக இக்கும். முக்கியமாக நீங்கள் நன்கு சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நல்ல வெற்றியைத் தரும்.



