கோச்சாரப்படி சனி பகவான் 3, 6,11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது சில ராசிகளுக்கு ராஜயோகம் தருவார். அந்த வகையில் தற்போது சனி பகவான் மகர ராசியில் அமரப்போகிறார்.

சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் பலன்களை தருகிறார். சனி பகவானுக்கு அனைத்து மக்களும் பயப்படுவார்கள்.
இந்த நிலையில் வரும் 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதிக்கு பின்னர் சனி பகவான் மகர ராசியிலிருந்து முழுவதுமாக விலக உள்ளார். இதன் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த ஏழரை சனி மகர ராசி அன்பர்களுக்கு முழுவதுமாக முடியப்போகிறது.
எனவே இதுவரை மகர ராசிக்கு வாழ்வில் இருந்த பிரச்சனை விலகி இனிமேல் எப்படிப்பட்ட நல்லது நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
2012 முதல் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் தற்போது உங்கள் வாழ்வில் ஒரு நல்ல படிப்பினை கற்றுத்தந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கைளையும் உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இது பெரிய அனுபவமாக அமைந்திருக்கும். இந்த நிலையில் இவ்வருடம் முதல் எல்லா கஷ்டங்களும் தீரும். சனி பெயர்ச்சியின் பின் சிறப்பான காலகட்டமாகவே அமையப்போகிறது.
இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவதோடு நல்ல வாழ்க்கை துணை அமையும் இதுவரை திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு விலகும்.
நமது அடிப்படை தேவைக்கு தொழில் மிகவும் முக்கியமாகும். சனி மூன்றாம் இடத்தில் அமரும் போது அதிர்ஷ்டமும் செல்வாக்கும் உங்களுக்கு அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக மூன்றாம் இடமான தைரியம் வெற்றி ஆபரணம் முயற்சி ஆகிய பலன்களை குறிக்கும் இடத்தில் சனி பகவான் அமரப்போகிறார்.
எனவே மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளை எழுதக்கூடியவர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும். இனி வரும் எல்லா தேர்தலிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மேலும் நீண்ட காலமாக வாழ்க்கையில் தொழில் செய்ய வேண்டும். என்று நினைப்பவர்களுக்கு புதிய தொழில் அமையும். வியாபாரத் துறையில் பெரும் லாபத்தை சந்திக்க போகிறீர்கள்.
இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்த உடல் ரீதியான பிரச்சனைகள் தீரப்போகிறது. தாம்பத்தியத்துக்கு இடையே பிரச்சனைகள் இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மேலும் கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்களும் நீங்க போகிறது மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்பும் முடிவுக்கு வரப்போகிறது. மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி மகர ராசி அன்பர்களுக்கு மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியாக வாழும் காலகட்டமாகவே அமையப்போகிறது.



