நகங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பு, வடித்தில் இருக்காது. அதனால் அந்த நகத்தின் வடிவத்தை வைத்து ஒருவரது குணாதிசயங்களை கூறி விடலாம்.

முக்கோணம் வடிவ நகம்
உங்களின் நகம் இப்படத்தில் காட்டியது போல முக்கோண வடிவத்தில் இருந்தால், அவர்களுக்கு தோல்வி என்றாலும், தோல்வி அடைவதும் என்றாலும் பிடிக்காது.
எப்போதுமே பிரபலமாக, புகழுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும், நால்வர் மத்தியில் முதன்மையாக அறியப்படும் நபராகவும் இருக்க வேண்டும் என்று கருதுவார்கள்.
உங்கள் மனநலம் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் எப்போது எப்படி இருப்பீர்கள் என்று அனைவராலும் அறிந்துக் கொள்ள முடியாது.

பாதாம் வடிவ நகம்
உங்களின் நகம் இப்படத்தில் காட்டியது போல பாதாம் அல்லது வெண்ணெய் பழம் போன்ற வடிவத்தில் இருந்தால் நீங்கள் இயல்பாகவே மென்மையான மனம் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பீர்கள்.
சிறு வார்த்தை, சிறு செயல் கூட உங்களை புண்பட வைத்துவிடும். மற்றவர்களுக்கு உதவுவது, நட்பாக பழகுவது, அன்பு பரிமாறுதல், எந்த ஒரு விடயத்தையும் மென்மையான வழியில் காண்பது, நடப்பது போன்றவை உங்கள் குணங்களாக இருக்கும்.

குட்டை வடிவ நகம்
உங்களின் நகம் குட்டை வடிவில் இருந்தால், நீங்கள் யாராலும் மாற்ற இயலாத பர்பெக்ட் ஆளாக இருக்கலாம். எதையும் பர்பெக்ட்டாக எதிர்பார்க்கும் உங்கள் குணத்தாலேயே நீங்கள் பயணிக்கும் பாதையில் பல கடுமைகள் காண்பீர்கள்.
உங்களிடம் பொறுமை இருக்காது, அடிக்கடி கோபம் வரும். எந்த வேலையாக இருந்தாலும் துரிதமாக யோசிக்கும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள்.

சிறிய சதுரம் வடிவ நகம்
உங்களின் நகம் சிறிய சதுரம் போன்ற வடிவத்தில் இருந்தால், நீங்கள் சமயோசிதமாக எண்ணும் திறன் படைத்தவர், திறமைசாலி, எதற்கும் வளைந்துக் கொடுத்து போவீர்கள்.
கூர்மையான அறிவும், பார்வையும் இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் உடனே அதை கற்று அறிந்து துரிதமாக செயற்படுவீர்கள்.

கூர்மையான வடிவ நகம்
உங்களின் நகம் நீளமாகவும், கூர்மையாகவும் இருந்தால் நீங்கள் ஆடம்பர வாழ்க்கை விரும்பும் நபராக இருக்கலாம். நீங்கள் எளிதாக எரிச்சல் அடையும் குணம் கொண்டிருக்கலாம்.
யாராக இருந்தாலும் தனக்கு முதல் மரியாதை அல்லது மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்று அதிகமாகவே இருக்கலாம்.

அகலமான வடிவ நகம்
உங்களின் நகம் நீளமாகவும், அகலாமானதாகவும் இருந்தால் உங்களிடம் தலைமை பண்பு பிறப்பிலேயே காணப்படும். தாங்கள் கொடுக்கும் வாக்கிற்கு அதிக மதிப்பும், அதை சார்ந்த பெரும் கடமையும் கடைப்பிடிக்கும் நபர்களாக திகழ்வார்கள்.
செயலில் பொறுமை, கவனம், வீரியம் அனைத்தும் இருக்கும். சுதந்திரம், அமைதி, சமநிலை, திட்டமிட்டு செயற்படுவது என ஒரு சமநிலையான வாழ்க்கை வகுத்து வாழ்பவராக இருப்பீர்கள்.



