
இந்து சாஸ்திரப்படி அன்னை லட்சுமி செல்வத்தின் அன்னையாக கருதப்படுகிறார். அதுபோலவே குபேரரும் செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வாழ்வில் பணத்தேவை ஏற்படும் போது பொதுவாக மக்கள் அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவது வழக்கம். அன்னை லட்சுமியுடன் குபேரரையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில் எப்போதும் பணத்திற்கும், செல்வச் செழிப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். ஒரு மனிதனுக்கு குபேரரின் அருள் இருந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்படாது. அவர் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையே இருக்காது.
குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார். குபேரரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை. பலர் தங்கள் வீடுகளில் குபேரரின் சிலையை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
செல்வங்களை அள்ளித்தரும் குபேரர் பாரபட்சமில்லாமல் அனைவர் மீதும் சமமாக அருள் பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் குபேரருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கின்றன. இந்த ராசிக்காரர்கள் மீது குபேரர் அருள் மழை பொழிகிறார். இவர்கள் பக்கம் ஏழ்மை அண்டாமல் அவர் பார்த்துக்கொள்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக உள்ளார். இவர் செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அளிப்பவராகக் கருதப்படுகிறார். குபேரரின் அருள் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் இருக்கும். இவர்கள் வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். குபேரரின் அருளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் எளிதில் சமாளிக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நிச்சயம் வெற்றி பெறும். சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். பதவியும் கௌரவமும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். அனைத்து சவால்களையும் சமாளித்து உயரத்தை எட்டும் திறமை அவர்களிடம் உள்ளது. குபேரனின் ஆசீர்வாதத்தால் இவர்கள் தங்கள் வாழ்வில் அதிகப்படியான செல்வத்தை ஈட்டுவதில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் சிறிய வாய்ப்பிலும் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் திறமை மூலம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் லட்சுமி அன்னையுடன் குபேரரையும் வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு குபேரனின் சிறப்பு அருள் இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும். இதனால் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் குபேரர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு என்றும் அஞ்ச மாட்டார்கள். இதன் காரணமாக இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் வாழ்வில் இன்பங்களுக்குக் குறைவிருக்காது.



