2026 சந்திர கிரகணம்: மார்ச் 3 அன்று நடைபெறும் முக்கிய நிகழ்வு
2026 சந்திர கிரகணம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் மற்றும் சந்திரன் இரண்டும் ராஜ கிரகங்களாகவும் ஒளிக் கிரகங்களாகவும் போற்றப்படுகின்றன. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு அல்லது கேதுவால் ஏற்படும் கிரகஸ்த நிலையே கிரகணம் என அழைக்கப்படுகிறது. கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் போலவே, கிரகணங்களும் நேரடி மற்றும் ஆழமான தாக்கத்தை செலுத்தும் என தொன்றுதொட்டு நம்பிக்கை நிலவுகிறது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகணம் கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்படும் கிரகணமாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிகளுக்கு அதிகமான அசுப பலன்களை அளிக்கக்கூடும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிம்மம்
இந்த 2026 சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை உருவாக்கக்கூடும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். தொழில் தொடர்பான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் சிறிய விரிசல்கள் தோன்றக்கூடும். மொத்தத்தில், இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினர் நிதானமாக செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் பொருளாதார ரீதியாக சற்று சவாலான காலமாக அமையலாம். திடீர் செலவுகள் அல்லது நிதி நெருக்கடி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மன அழுத்தமும் அதிகரிக்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். தொழில் சூழலில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். சக ஊழியர்களுடனும் மனக்கசப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அமைதியாக செயல்பட வேண்டும்.
கும்பம்
சனி கிரகத்தால் ஆளப்படும் கும்ப ராசியினருக்கு 2026 சந்திர கிரகணம் மற்ற ராசிகளை விட சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். அதன் விளைவாக குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்கள் தோன்றலாம்.
பணவரவில் குறைவு அல்லது வீழ்ச்சி ஏற்பட்டதாக உணரப்படலாம். மனநிலை சோர்வாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குறிப்பு
இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஜோதிடக் கணிப்புகள், பஞ்சாங்கங்கள் மற்றும் ஆன்மீக நூல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இவை தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகின்றன.



