பிரபல டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு சாம் நிஷாந்த், புண்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர்.
இப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் நிஷாந்த் மற்றும் புண்யா இருவரும் பெற்றனர்.
இரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று சூப்பர் சிங்கர் சீசன் 7 வின்னர் பட்டத்தை வென்றார்.

வெற்றிபெற்ற முருகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், இலங்கை பெண் புண்யா வெற்றிபெருவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.




