ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு, நவகிரகங்களில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதால், இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். தற்போது குரு ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 09 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 13 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் குரு மற்றும் சுக்கிரனின் நிலையால் சமசப்தக் ராஜயோகமானது உருவாகவுள்ளது.
இவ்விரு கிரகங்களால் உருவாகவுள்ள சமசப்தக் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. இந்த ராஜயோகமானது நவம்பர் 07 வரை நீடித்திருப்பதால், இக்கால கட்டத்தில் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது சமசப்தக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சமசப்தக் ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கினால் சிறப்பான பலனைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். மேலும் முதலீடுகள் செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அது முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
தனுசு
சமசப்தக் ராஜயோகமானது பலவிதமான நன்மைகளை வழங்கவுள்ளது. முக்கியமாக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு சில புதிய யோசனைகள் தோன்றும். அந்த யோசனைகளானது நல்ல லாபத்தைக் கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, சொத்து வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
சமசப்தக் ராஜயோகமானது நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்யும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். இது தவிர வேறுபல ஆசைகளும் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது இக்காலத்தில் முடிவுக்கு வரும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை எதிரிகளால் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும்.



