பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சித்ரா.
விஜேவாக மீடியாவில் தன் பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.
நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர், மொடலிங் என பன்முகத் திறமை கொண்ட சித்ரா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், நீங்க எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க? அப்படி பண்ணினால் அது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அது காதல் திருமணமா? என கேள்வி கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த சித்ரா, எனது திருமணத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, அதற்குள் யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறார்களோ அவர்கள் சொல்லலாம் என கூறியிருந்தார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்