நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் தளபதி கேரக்டருக்கு மனைவியாக நடித்திருந்தார் நடிகர் நித்யா மேனன். படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது.
ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என நித்யா மேனன் இயக்குனர் அட்லீயிடம் கூறினாராம். இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய அவர், “நான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் என்னை யாரேனும் கொன்றுவிடுவது போன்று கதை இருக்கும், அது எனக்கே சலிப்பாகிவிட்டது. அதனால் மெர்சல் பட கதையை அட்லீ கூறும்போது ‘நான் இறப்பது போன்ற படங்களில் நடிக்கமாட்டேன். மீண்டும் இப்படி ஒரு கதையுடன் வந்துள்ளேர்களே’ என சொன்னேன்” என நித்யா மேனன் கூறியுள்ளார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்