ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் நிலைகளால் சுப மற்றும் அசுப யோகங்களுடன், ராஜயோகம் மற்றும் நவபஞ்ச யோகங்களையும் உருவாக்கும்.

அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் அக்டோபர் 08 ஆம் தேதி சுக்கிரனும், செவ்வாயும் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது.
மேலும் தொழிலில் நல்ல லாபத்துடன், முன்னேற்றதும் ஏற்படவுள்ளது. இப்போது சுக்கிரன் மற்றும் செவ்வாயால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
நவபஞ்ச ராஜயோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலை உயரும். பணியிடத்தில் உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். முக்கியமாக இக்காலகட்டத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது புதிய சொத்துக்கள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகத்தை கொண்டு வரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது பல நன்மைகளை வழங்கவுள்ளது. குறிப்பாக இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கம். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.



