வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்களால் அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேப் போல் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியுள்ளன. அதுவும் இந்த இரண்டு பெரிய ராஜயோகங்களும் நவராத்திரியிலும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் நவராத்திரி அக்டோபர் 03 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நவராத்திரியில் இந்த ராஜயோகங்கள் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால், அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும்.