பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியே போகவேண்டும் என கமல் அறிவித்தது, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஷாக் ஆகினர். ஆனால் செட்டில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆராவரம் செய்தனர்.
‘இதை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக எதோ ட்விஸ்ட் இருக்கும். சீக்ரெட் ரூமில் போடுவார்கள்” என வனிதா கூறினார். மற்ற போட்டியாளர்களும் இதையே தான் பேசிக்கொண்டனர். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை.
பின்னர் பேசிய சாக்ஷி “தைரியமாக பேசியது தவறா? நடிக்கிறது தானா இந்த கேம்” என கூறி அழுதார். மேலும் வெளியில் வந்த பிறகு, “உங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை?” என கமல் கேட்டார். அதற்கு பதில் அளித்த வனிதா “நம்பர் எதாவது தப்பா கொடுத்துட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன்” என கூறினார்.





