பல்வேறு பிரச்சனைகள் காரணம் காட்டி தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் நடத்திவருகிறது. இந்த மாத துவக்கம் முதல் எந்தவொரு புது படமும் வெளியாகவில்லை.
16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டன. ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும், மற்ற 3 சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது சினிமா துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் வெளிப்படையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்படி பாரபட்சமாக சங்கம் நடந்துகொள்வதால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி ‘ஜூங்கா’ படப்பிடிப்பை மீண்டும் துவங்கும்படி படக்குழுவுக்கு கூறியுள்ளார்.
அதனால் விஜய் சேதுபதி, சயீஷா உட்பட படக்குழு தற்போது போர்சுகல் சென்றுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கம் தடையை மீறி விஜய் சேதுபதி இப்படி செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



