மும்பை : பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தலையில் கண்ணாடி டம்ளரை உடைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள் வீடுகளில் யாரும் முயற்சி செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா நடிகைகள் இப்போதெல்லாம் நடிகர்கள் அளவிற்கு ஒரு படத்துக்காக பணிபுரிகிறார்கள். அப்படி தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
பதறிய ரசிகர்கள்
இவர் திடீரென நேற்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், கண்ணாடி கிளாஸை எடுத்து தன் தலையில் உடைப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் பயத்தோடு என்ன ஆனது எனப் பதறினர்.
மோசமான முடிவு
காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மோசமான நாளின் முடிவில், இந்த மோசமான முடிவை எடுத்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். கண்ணாடி அல்ல பிரியங்கா சோப்ரா கிளாஸை அவரது தலையில் உடைக்கும் காட்சி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் அந்த கிளாஸ் கண்ணாடி அல்ல… உடைத்தாலும் காயம் ஏற்படாத Sugar Glass என்று கூறப்படுகிறது.



