6 வருடங்கள் கழித்து தென்னிந்திய சினிமாவுக்கு திரும்பியுள்ளார் இலியானா. தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்துவிட்டு, பாலிவுட் சென்றவர், அங்கு பிசியாக நடித்து வந்தார். அப்போது தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து விமர்சித்து மும்பையில் பேட்டி அளித்து வந்தார். இந்நிலையில் இந்தி பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்துவிட்டது.
சமீபத்தில் வந்த தெலுங்கு பட வாய்ப்பை இலியானா ஏற்றுக்கொண்டுள்ளார். ரவிதேஜா நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தில் இலியானா நடிக்க இருக்கிறார். ஸ்ரீனுவைட்லா இயக்குகிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்