ஒரு சில ஹீரோக்கள் உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் உள்ளது. கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி படங்களில் நடித்த ராதிகா ஆப்தே ஏற்கனவே இதுபோன்ற புகார் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய படமொன்றில் நடித்த போது முதல் நாள் முதல் படத்திலேயே தன்னிடம் ஹீரோ ஒருவர் தவறாக நடக்க முயன்றார் என்றார்.
ஆனால் அதே ஹீரோவுடன் மீண்டும் நடித்தது ஏன் என்றபோது ராதிகா ஆப்தே கூறியதாவது: தென்னிந்திய முதல் படத்தில் முதல்நாள் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ என்னிடம் தவறாக நடக்க முயன்றார். கோபத்தில் அவரிடம் சண்டைபோட்டேன். அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை எங்களுக்குள் மோதல் நீடித்தது. ஆனாலும் மீண்டும் அதே ஹீரோவுடன் ஜோடியாக நடித்தது ஏன் என்கிறார்கள்.
அதற்கு காரணம் அப்போதைக்கு எனக்கு பணம், புகழ் தேவையாக இருந்தது. இந்த இரண்டும. என்னிடம் அப்போது இல்லை. அதனால் மீண்டும் அவருடன் நடித்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத வேடம், கவர்ச்சி வேடங்களிலும் கூட நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு காரணம் அந்தசமயத்தில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடையாது.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். தொல்லை தந்த ஹீரோவுடனும், கவர்ச்சி வேடங்களிலும் பணம் புகழுக்காகவே நடித்ததாக கூறும் ராதிகா ஆப்தே, தற்போது பணம், புகழ் இரண்டும் பெற்ற பிறகும் டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.