சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டிவரும் வேளையில், பிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
“சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்” என முதலில் நேஹா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ‘உங்கள் கணவருக்கு தான் அப்படி நடந்ததா?’ என பலரும் கேட்டதால், கொஞ்ச நேரம் கழித்து அதை நீக்கிவிட்டார்.

“எனக்கும் என கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொழுதுபோக்குக்காக செய்யவில்லை” என கூறியுள்ளார்.
Let ppl do their job with ease🙏 it’s ain’t any cheap leaks!! pic.twitter.com/MryNoaKMZ6
— neha nehu:) (@NehaGnanavel) March 20, 2018



