பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்து டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் மூலம் ஏற்பட்ட பிரச்சினை கொஞ்சம் கிடையாது. தற்போது உலகநாயகன் வந்து நிற்பதற்கு அதிகமான கண்டெண்ட் கொடுத்துள்ளது அந்த டாஸ்கில் ஏற்பட்ட பிரச்சினையே…
இந்த டாஸ்கில் நன்றாக விளையாடாத அபிராமி, லொஸ்லியா இருவரும் ஜெயிலில் போடப்பட்டனர். ஜெயில் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு அவர்கள் விளையாடாமல் இருந்தனராம்.
தற்போது கவின், லொஸ்லியா காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிறையில் இருக்கும் லொஸ்லியாவை கவின் விழுந்து விழுந்து கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் லாஸ்லியாவின் கையைப் பிடிப்பதும், கன்னத்தை தொடுவதும் என்று அக்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஹைலைட்டான விடயம் என்னவென்றால் இவர்களின் அலப்பறையை பின்னே இருந்து சாக்ஷி அவதானித்துக் கொண்டிருப்பது தான்.



