பிக்பாஸ் வீட்டில் நடிகை ஐஸ்வர்யா தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார். இந்த வார எலிமினேஷனில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு இன்று பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார்.
“அதில் நடிகர் சென்ட்ராயனின் முடியை ரெட் கலரில் மாற்ற ஒப்புகொள்ளவைக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்” என ஐஸ்வர்யாவிடம் பிக்பாஸ் கூறினார்.
ஆனால் அதன் பிறகு சென்றாயனிடம் சென்று ஐஸ்வர்யா பெரிய பொய் ஒன்றை சொன்னார். “இப்படி செய்தால் நீங்கள் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்” என கூறினார்.
இவர் இப்படி பொய் சொன்னது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமின்றி ஷோவை பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் அவரை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.




