சர்ச்சைக்கு நடுவே தற்போது போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் முக்கிய புள்ளி நடிகர் ஆர்யா. அவருக்கு இதன் மூலம் கல்யாணம் என சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
16 பெண்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சுஸானா, சீதாலெட்சுமி, அகாதா என மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள். இவர்களில் ஆர்யாவுடன் கைகோர்ப்பது யார் என்பது தான் சர்ப்பிரைஸ்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ், இது பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்தெடுக்க கிடைத்த சுதந்திரம். இது முழுக்க முழுக்க போட்டியாளரின் விருப்பம் தான்.
கடைசியாக வெற்றி பெரும் போட்டியாளர் ஆர்யாவை வேண்டாம் என சொன்னால் திருமணம் நடக்காது என கூறியுள்ளார். இதில் எதோ இருக்கிறது என பலரும் சொல்லிவரும் நேரத்தில் இயக்குனர் சொன்னது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.



