சுசித்ரா வெளியிட்ட வீடியோக்கள்: ரவி மோகன் – கெனிஷா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ஆதரவு!
ரவி மோகன், ஆர்த்தி மற்றும் கெனிஷா ஆகியோரின் திருமண விவகாரம் கடந்த சில வாரங்களாக இணையத்தில் சூடுபிடித்திருக்கும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரபல பாடகியும், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தனது கருத்துகளை பகிர்ந்து வருபவருமான சுசித்ரா, இவர்களுக்காக தொடர்ச்சியாக நான்கு வீடியோக்கள் வெளியிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

🔹 என்ன சொல்கிறார் சுசித்ரா?
சுசித்ரா வெளியிட்ட வீடியோக்களில், ஜெயம் ரவியும் கெனிஷாவும் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் முதல் காணொளியில் விளக்கம் அளிக்கிறார். “இவர்கள் மீது கேன்சல் கல்ச்சர் ஏன்?” எனத் தோல்வியடைந்த கணவியால் புனைந்து கொண்டிருக்கும் பிரச்சனை என சுட்டிக்காட்டுகிறார்.
View this post on Instagram
🔹 உடை விமர்சனங்களுக்கு பதில்
இரண்டாவது வீடியோவில், கெனிஷாவின் உடை தேர்வுகள் குறித்து விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு பதிலளிக்கிறார் சுசி. “ஒரு பெண் எந்த உடையை அணிய வேண்டும் என்று உங்களால் முடிவெடுக்க முடியாது. அவர் உழைப்பால் முன்னேறியவர்தான்” என பக்க வாதம் பேசுகிறார்.
View this post on Instagram
🔹 குழந்தைகள் விவகாரம்
மூன்றாவது வீடியோவில், குழந்தைகள் நலன் குறித்து வெளியான கருத்துகளை விமர்சிக்கிறார். “அந்த பிள்ளைகள் தங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பார்த்துக்கொள்ள குடும்பத்தில் பலர் உள்ளனர். இதை வைத்து யாரும் முட்டாள் பேச்சுகள் பேச வேண்டாம்” என கூறுகிறார்.
View this post on Instagram
🔹 விவாகரத்து இல்லையெனில் உறவு தவறு?
நான்காவது வீடியோவில், விவாகரத்து பெறாத நிலையில் ரவி மோகன் கெனிஷாவுடன் இருக்கக்கூடாது என்கிற கருத்துக்கு, “நீங்கள் யாரும் நீதிபதியாக மாற வேண்டாம். அவர் சட்டபூர்வமாக நடந்திருக்கலாம். நீதிமன்றமே முடிவெடுக்கும்” என கூருகிறார்.
View this post on Instagram
🔹 மக்கள் மற்றும் கெனிஷா ரியாக்ஷன்
இந்த வீடியோக்களுக்கு பதிலளித்த பலரும், சுசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். கெனிஷா இவைகளை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்துள்ளார், இது மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரவி மோகன் – கெனிஷா விவகாரம் நாளுக்குநாள் புதிய பரிமாணங்களை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், சுசித்ராவின் இந்த வீடியோ உரையாடல்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இது இன்னும் எதுவரை செல்லும் என்பது பொது மக்களும், நீதிமன்றமும் தான் முடிவு செய்ய வேண்டும்!



