இந்த பெயர்ச்சியின் போது கேது பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கப்போகிறார். இதனால் இந்த காலம் சற்று போராட்டம் மிகுந்ததாக இருக்கப் போகிறது.
இந்த காலத்தில் உடல் நலப் பிரச்னைகள் அதனால் செலவு என மன கஷ்டம் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரம், உத்தியோகம் என எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் விரத்தியான மன நிலை இருக்கும்.
இருப்பினும் நம்பிக்கையுடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலும் கண்டிப்பாக வெற்றியைப் பெற்று தரும். தைரியம் மட்டுமே உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்
தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்ககூடிய பிரத்யங்கிரா தேவியை ஞாயிறன்று ராகு காலத்தில் வழிபடுவதால் நல்ல பலனைத் தரும்.


