சூதாட்ட கிளப் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா இலங்கை சென்றுள்ளார்.
கொழும்புவில் உள்ள பிரபல காசினோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை சென்றிருக்கும் நமீதா அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக நடிகை காஜல் அகர்வால் இந்த கேசினோவுக்குச் சென்றிருந்தார். இங்கு அழைக்கப்படும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.




