
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறது. அந்தவகையில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி அதாவது இன்னும் 6 நாட்களில் செவ்வாய் கிரகம் குருவின் ராசியான தனுசு ராசியிலிருந்து வெளியேறி அதன் உச்ச ராசியான மகர ராசியில் பெயர்ச்சி அடைந்து மார்ச் 15 வரை மகர ராசியில் தான் இருப்பார். செவ்வாய் கிரகத்தில் இந்த மாற்றத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களை கொண்டு வரும். செவ்வாயின் நிலை மாறுவதால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிறைய வேலை வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் ஈடுபடுபவர்களும் பலன்களைப் பெறலாம். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு மிகவும் மங்களகரமான நேரம் ஆரம்பிக்கும். செவ்வாயின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். தொழில், வேலை தேடும் இளைஞர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கம். குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதை பெறுவீர்கள். இந்த நேரத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
செவ்வாயின் ராசி மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். மறுபுறம், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், வியாபாரத்தில் சுப முடிவுகளைப் பெறுவீர்கள், அத்துடன் விரும்பிய முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், எங்கிருந்தாவது ஒரு நல்ல வேலைக்கு அழைப்பு வரலாம்.
துலாம்
இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம், வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான நேரம் இது, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உணவு தொடர்பான வியாபாரத்தில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள், கோபத்தை கட்டுப்படுத்தி தியானம் செய்யவும். உங்களின் உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசு வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நல்ல நேரம், முழு ஆற்றலுடன் படிக்ககும். வாகன விபத்துகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள், அது உங்கள் முகத்தில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். காதல் உறவில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அதே சமயம், திருமணம் மற்றும் குடும்பத்தில் ஒருசேர உற்சாகம் ஏற்படும். கல்விப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கும் வேலையும் கிடைக்கும்.



