கர்ப்பம்? உறவா? – வதந்திகளை திட்டவட்டமாக மறுக்கும் கெனிஷா
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் செய்தி ஒன்றை நடிகை, பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் நேரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரவி மோகன் உடனான உறவுப் பேச்சு மற்றும் கர்ப்பம் குறித்த வதந்திகளுக்கு ‘கர்மா உங்களை விட்டுவிடாது’ என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ரவி மோகன் விவாகரத்து பின்னணியில் எழுந்த புதிய சர்ச்சை
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரவி மோகன், கடந்த சில மாதங்களாகவே தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து விவகாரத்தில் ஊடகங்களை கிளப்பி வந்துள்ளார். இந்நிலையில், ரவி – கெனிஷா இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் திருமண விழாவில் ஒரே விதமான ஆடைகளில் கலந்து கொண்டதுதான் புதிய விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.
“நான் கர்ப்பமாக இல்லை” – கேஷனா விளக்கம்
இணையத்தில் பரவும் ‘கெனிஷா கர்ப்பமாக இருக்கிறார்’, ‘இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்’ என்ற செய்திகளை பற்றி கெனிஷா கூறும்போது,
“வாய்க்கு வந்ததைக் கூற வேண்டாம். கர்மா சும்மா இருக்காது. நான் கர்ப்பமாக இல்லை. யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்பும்,”
என்று திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.
கஷ்டங்களை கடந்து வந்த வாழ்க்கை…
கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்:
“17 வயதில் அம்மாவையும், பின்னர் அப்பாவையும் இழந்தேன். ரூ.500 சம்பளத்திற்கு வேலை செய்தேன். பாடகியாக என் இடத்தை பிடித்தேன். இப்போ கசப்பான பேச்சுக்களால் மீண்டும் சாய வேண்டாம்.”
“பிரியாணி சாப்பிட்டு ஓய்வெடுங்கள்!” – கெனிஷாவின் பதிலடி
இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் கேஷனாவின் தைரியம் மற்றும் நேர்மையைப் பாராட்டும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
“எது உண்மை, எது பொய் எல்லோருக்கும் ஒருநாள் தெரியும். அதுவரை பிரியாணி சாப்பிட்டு ஓய்வெடுங்கள்” என அவர் சிரிப்போடு முடித்துள்ள பேச்சு, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
குறிப்பு: இது ஒரு சமூக வலைத்தளங்களில் பரவும் சினிமா சம்பந்தமான செய்தி. இதில் உள்ள தகவல்கள் அந்தந்த பிரபலங்களின் விளக்கங்களை அடிப்படையாக கொண்டவை.



