பிரபல ரிவியில் விருது வாங்கும் நிகழ்வில் ஜோதிகா பேசியுள்ள பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளதுடன், சமூகவலைத்தளவாசிகளின் கோபத்தினை பெரிதும் தூண்டியுள்ளது.
நேற்று JWF சினிமா விருதுகள் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை ஜோதிகா நடிகை சிம்ரனின் கையினால் விருதினைப் பெற்றார். அதன் பின்பு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக அதைக்குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்…. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார்.
இதனைக் கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் தனக்கு மட்டுமே சமூகஅக்கறை இருப்பது போன்று இப்படியா பேசுவது என்றும் இவர்கள் போடும் மேக்கப், எடுக்கப்படும் படம், அதற்கு வரும் உடைகள் இதற்கெல்லாம் செலவு குறைவாகவா ஆகின்றது என்று பயங்கர கோபத்தினைக் காட்டியுள்ளனர்.



