
இந்துக்களின் நம்பிக்கைகளின்படி, நவ கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் குருவின் ராசி சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும் குரு பகவான், வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். குரு பார்வை கோடி புண்ணியம் என்று சொல்லும் அளவுக்கு குரு இருக்கும் இடமும், அவரது பார்வைபடும் இடமும் முக்கியத்துவம் பெறுகின்றன.
குரு பெயர்ச்சி 2024
குரு 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறார். கடந்த ஆண்டு, ஏப்ரல் 22, 2023 அன்று, குரு தனது சொந்த ராசியான மீனத்த்தில் இருந்து மேஷ ராசிக்குள் சென்றார். தற்போது, அடுத்த மாதம் அதாவது, 2024 ஆம் ஆண்டு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு குடிபோகிறார்.
குரு பெயர்ச்சி எப்போது?
குரு மே 1, 2024 அன்று மாலை 14:29 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சியாவார். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜூன் 3, 2024 அன்று அதிகாலை 3:21 மணிக்கு அது அமைப்பில் இருந்து அஸ்தமனம் ஆவார். அக்டோபர் 9, 2024 அன்று காலை 10:01 மணிக்கு குரு ரிஷப ராசியில் வக்ர கதிக்கு செல்வார்.வக்ர கதியில் இயங்கும் குரு பகவான், பிப்ரவரி 4, 2025 அன்று மதியம் 13:46க்கு பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்தும் கிரகம் என்று அழைக்கப்படும் குருவின் பார்வை எந்த வீடுகளின் மீது விழுகிறதோ, அதன் நல்ல பார்வையாக இருந்தால், சுப பலன்களை அளிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சியாவதால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். அந்த 12 ராசிகளில் மேஷ ராசிக்கு இந்த பெயர்ச்சி எதுபோன்ற பலன்களை அளிக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி 2024 – மேஷ ராசி பலன்
குரு பகவான் மேஷ ராசிக்கு மிக முக்கியமான கிரகம். மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வீட்டின் அதிபதியாக திகழும் குரு பகவான், ஒன்பதாம் வீட்டோடு சேர்ந்து, உங்கள் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசியில் குரு பெயர்ச்சியவது பணப்பிரச்சனைகளைத் தீர்த்து, திடீர் பணவரத்தைக் கொடுக்கும்.
பணம் அதிக அளவில் வந்து சேரும், உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும் பண வரத்து இருப்பதால், மனதில் மகிழ்ச்சியும் சிந்தனையில் தெளிவும் ஏற்படும். சிந்தனைத் தெளிவு உங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்கும். இதனால், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள்.
தொழில் செய்பவர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மே மாத குரு பெயர்ச்சி எதிர்பார்த்த பலன்களையும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்து சேர்க்குக்ம். குடும்பத் தொழில் செய்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்கும். பாக பிரிவினைகள் ஏதெனும் இருந்தால் அதுவும் நன்மையைக் கொடுக்கும்.
குருபலன் திருமண யோகம்
குடும்பத்தில் திருமணமணம், குழந்தை பிறப்பு என சுப காரியங்கள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். இது வீட்டிற்கு மகிழ்ச்சியைத் கொண்டு வந்து கொட்டும். இரண்டாம் வீட்டில் அமர்ந்து குரு பகவான் உங்களின் ஆறாம் வீடு, எட்டாம் வீடு மற்றும் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால், எவ்வளவு செலவானாலும் பணப் பற்றாக்குறை என்பதே இருக்காது.
கடன் அடைக்க செய்யும் குரு பெயர்ச்சி
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பும் வரலாம். இதுவரை உங்களுக்கு எதிர்பாக செயல்பட்டுவந்தவர்களும் தற்போது அடங்கிவிடும் சூழ்நிலை வரும். வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர நல்லிணக்கமும் அன்பும் அதிகரிக்கும்.
திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் பிரச்சனைகளை தீர்த்து வெற்றி பெறுவீர்கள். மே 3 மற்றும் ஜூன் 3 க்கு இடையில், குரு எரிப்பு நிலையில் இருக்கும் போது ,கவனமாக இருக்கவும். அந்த சமயத்தில் வேலையில் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் வார்த்தைகளை கவனமாக கையாளவும்.



