வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, ஆற்றல், நம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

கிரகங்களில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். தீபாவளிக்கு முன் செவ்வாய் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலர் கவனமாகவும் இருக்க வேண்டும்.
இந்த கடக ராசியில் செவ்வாய் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதுவும் ஜனவரி 21 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயத்தையும் பெறுவார்கள். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் இடமாற்றத்தைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடிவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். மேலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.



