விஷால்-தன்ஷிகா திருமணம் உறுதி – திரையுலகில் தொடருமா தன்ஷிகா?
சமீபத்தில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதல் திருமண அறிவிப்பை வெளியிட்டு திரையுலகத்தையே அசத்தியுள்ளனர். இதில், தன்ஷிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு தனக்கே உரிய பதிலை தந்துள்ளார்.

திருமணத்திற்கு பின் நடிப்பேன் – தன்ஷிகா உறுதி
மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்ஷிகா, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,
“திருமணம் நடந்த பிறகும் படங்களில் நடிப்பேன். இது எனக்குத் தெரிந்த ஒரே வேலை. இது ஒரு நாள், இரண்டு நாள் வேலை இல்லை. 15–16 ஆண்டுகளாக நான் உழைத்திருக்கும் துறையில் தான் தொடரப்போகிறேன்”
என்று உறுதியாக தெரிவித்தார்.
SIBA நிறுவனத்தில் புதிய முயற்சி
மேக்கப் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தன்ஷிகா ஆதரவில் SIBA நிறுவனம் மதுரையில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு மாநிலங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக நடிப்பில் இருக்கிறார்
தன்ஷிகா, தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக பல முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் அடுத்த படத்தின் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துவருவதாகவும் கூறினார்.
விஷால்-தன்ஷிகா காதல் திருமணம்
திருமண அறிவிப்பில், “நாங்கள் 15 ஆண்டுகளாக நண்பர்கள், சில ஆண்டுகளாக அந்த நெருக்கம் காதலாக மாறியது. ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடைபெறும்” என தன்ஷிகா தெரிவித்திருந்தார்.



