அரச குடும்ப வாரிசு ஆர்த்தியின் வாழ்க்கையில் புதிய திருப்பம்?
நடிகர் ஜெயம் ரவி (இப்போது ரவிமோகன்) – அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆர்த்தியின் தாயார் கல்பனா பகிர்ந்துள்ள ஒரு உணர்ச்சிகரமான பதிவு சமூக வலைத்தளங்களில் மறுமணம் குறித்த வதந்திகளை தூண்டியுள்ளது.

விவாகரத்து, வதந்திகள் மற்றும் கெனிஷா தொடர்பு
ஜெயம் ரவி கடந்த ஆண்டு ஆர்த்தியை பிரிக்க விருப்பமுள்ளதாக அறிவித்தபோது, காரணமாக அவரது அடக்குமுறையைக் கூறினார். இதற்கு பதிலளித்த ஆர்த்தி, தனது பக்கம் நியாயங்களை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.இதற்கிடையில் ரவிமோகனுக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்பவருக்கும் உள்ள தொடர்பு குறித்து பல வதந்திகள் பரவின. மேலும், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வருவது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
“மறுமணமா?” – கல்பனாவின் பதிவால் கிளம்பிய சந்தேகம்
ஆர்த்தியின் தாயார் கல்பனா தனது சமூக வலைதள பக்கத்தில்,”இருள் சூழ்ந்திருக்கும்போது, ஒரு கை நீள்கிறது,. அதை இறுகப்பற்றிக் கொள்…”
என பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஆர்த்தி புதிய வாழ்க்கையை தொடக்கப்போகிறாரா?” என்ற சந்தேகத்தில் விழுந்துள்ளனர்.

அரச குடும்ப பின்னணி
ஆர்த்தி, மைசூர் மகாராஜா ஜே.எஸ். சாம்ராஜ் உடையாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் கல்பனா – மகாராஜாவின் மனைவி, சென்னையில் உள்ள பங்க்லாவில் வாழ்ந்த அரச குடும்ப மரபின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தி மறுமணம் செய்யப்போகிறாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. ஆனால், அம்மாவின் உணர்ச்சிகரமான பதிவு ரசிகர்களிடையே பல்வேறு உணர்வுகளை எழுப்பி, மீண்டும் ரவிமோகன் – ஆர்த்தி விவகாரம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.



