தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான் கெளசல்யா. இவர் தமிழ் மற்றுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது இவருக்கு 40 வயதாகிறது. இருந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது காலகட்டத்தில் நடித்த அத்தனை நடிகைகளுக்கும் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிள் வாழ்க்கையை வந்து வருகிறார்.
இதற்கான காரணத்தை கூறியதாவது, “கல்யாணம் செய்துகொண்டு கணவர், குழந்தை என குட்டி வட்டத்திற்குள் வாழ விருப்பமில்லை. எல்லோருக்காகவும் வாழ விரும்புகிறேன் மேலும் தற்போது வாழ்ந்து வரும் இந்த சிங்கிள் வாழ்க்கையே நன்றாக இருக்கிறது. எனவே இப்போதைக்கு கல்யாணம் என்ற யோசனையே எனக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.



