பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 27நாட்களை கடந்துள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த முறை எலிமினேஷன் அறிவிப்பை பிக் பாஸ் வித்தியாசமான முறையில் செய்துள்ளனர்.
திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ஜோக்கர் ஒருவர் வந்துள்ளார். இதனால் என்னவாக இருக்கும் என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.
பின்னர் காப்பாற்றப்பட்ட நபர்களுக்கு ஜோக்கர் பச்சை நிற பழங்களைக் கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் அபிராமி, சரவணன், சேரன் காப்பாற்றப்பட்டுள்ளனர். இறுதியில் மோகன் வைத்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுள்ளது.
மேலும், சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யாவிற்காக ஒரு பாடலை பாடி அவரை குஷி படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மோகன் வைத்யா மேடையில் சாண்டியின் பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக் குதித்துள்ளனர்.



