கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடையே காதல் மலர்வது அவ்வப்போது நடந்து வருகிறது. ஜெமினிகணேசனுக்கு 4 மனைவிகள். பிரபுதேவா, சிம்பு போன்றவர்கள் 2 பிரபல ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டனர். காதல் மன்னன்கள் பாலிவுட்டிலும் இருக்கின்றனர். ரன்பீர் கபூர் தற்போதைக்கு காதல் மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். முதலில் தீபிகா படுகோனுடன் டேட்டிங் செய்தவர் பின்னர் கேத்ரினா கைப்புடன் டேட்டிங் மற்றும் லிவிங் டு கெதர் பாணியில் காதல் வாழ்க்கையை அனுபவித்தார்.
தற்போது புதுக் காதலியுடன் இணைந்திருக்கிறார். பாலிவுட் இளம் ஹீரோயின்களில் ஒருவர் அலியா பட். இவருடன்தான் தற்போது ரன்பீர் கபூருக்கு காதல் மலர்ந்திருக்கிறது. அலியாவுடனான காதலை முதன்முறையாக ரன்பீர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி நேற்று மும்பையில் பேட்டி அளித்த ரன்பீரிடம், ‘அலியாபட்டுடன் உங்களுக்கு காதல் மலர்ந்துள்ளதா?’ என்றபோது பதில் அளித்தார்.

‘இப்போதைக்கு இது புதியது. அதிகம் பேச விரும்பவில்லை. எனக்கு மூச்சுவிட கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அலியாவை கண்டு நான் வியக்கிறேன். என்னுடைய வாழ்க்கையிலும் அவர் சரியான தேர்வாக இருப்பார். இது எங்களுக்கு புதிதுதான். இதற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. இன்றைக்கு நான் மிகவும் பக்குவப்பட்டிருக்கிறேன். உறவுகளை மதிக்க தெரிந்துகொண்டேன்’ என்றார்.



