வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்திருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தியாவில் குடியேறி பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து தற்சமயம் பிசியான ஹீரோயினாக மாறிவிட்டார்.
ஒரு பக்கம் படம், விளம்பரம், சினிமா நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் தத்தெடுத்த நிஷா என்ற குழந்தை, வாடகைத்தாய் மூலம் பெறப்பட்ட மற்ற 2 குழந்தைகள் என தனது குடும்ப பக்கத்தினையும் பார்த்து கொள்கிறார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான இவரை பெருமைப்படுத்தும் விதத்தில் டெல்லியில் மேடம் டுசாட்ஸ் நிறுவனம் அவரது உருவத்தை மெழுகு சிலையாக செய்துள்ளது.
இந்த சிலை அச்சுஅசலாக அப்படியே சன்னியை போலவே உள்ளது. இதனை சிலை வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கே சென்று சன்னி லியோன் திறந்து வைத்துள்ளார்.




