நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா, ஊரடங்கு உத்தரவினால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏக்கத்துடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர், பல சின்னத்திரை சீரியல்களிலும், படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பின்பு யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்துவரும் இலங்கை தமிழரான அமுதன் என்பவரைக் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கும் அவர், தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “இந்த நாட்கள் இப்போது முடியுமோ, மீண்டும் உங்கள் தோள்களில் விழ” என்று தனது கணவரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்