நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் நின்றவர். ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்தார். ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்பதே அவரின் கனவாம்.
வீட்டிலும் படிப்பிற்கு தான் முதல் இடம் என சொல்லிவிட்டார்கள். ஆனால் அவரது அப்பாவோ சினிமாவில் ஹீரோயினுக்கு கொஞ்சம் காலம் தான். அதனால் அந்த துறையே வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
பின் விடுமுறை நாட்களில் வந்து தான் பிரேமம் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றதால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்துள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது சினிமாவில் முழு ஹீரோயினாகிவிட்டதால் டாக்டராகும் கனவை விட்டுவிட்டாராம். அதே நேரத்தில் பகுதி நேர மருத்துவராக பணியாற்ற விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.



