உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடும் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க நடிகைகள் சிலர் சென்றிருக்கிறார்கள்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தொடரில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும்.
இந்தியா அடுத்ததாக நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து இழக்கும்.
#IndvsEng here we come Birmingham….so much fun bumping into @trishtrashers #airportdiaries muahhhhhh #bindu pic.twitter.com/uNEfMKXfAf
— varalaxmi sarathkumar (@varusarath) June 29, 2019
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர்.



