நடிகர் ஆர்யாவிற்கு பெண்தேடும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆர்யா ஒவ்வொரு பெண்களின் வீட்டுக்கும் சென்று அவர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மீண்டும் ஆர்யாவின் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார். கடந்த முறை வந்தது போல சிறப்பு விருந்தினராக வராமல், இந்தமுறை ஒரு நடனமாடியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களின் பின்னணியை பார்க்கும்போது திருமண நிகழ்ச்சி போலவே செட் உள்ளது. அதனால் ஆர்யாவிற்கு திருமணம் உறுதியாகிவிட்டதோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sneak peak… #EngaVeetuMapillai all set to burn the floor..!!! @arya_offl pic.twitter.com/BPGXsscouY
— varu sarathkumar (@varusarath) April 5, 2018



