Tag: thinatamil other news
புத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல்! செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்! இதோ உங்களுக்காக
கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…
தேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி! என்ன செய்தனர் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…
மெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிடிப்பு..!!
மெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…
திருகோணமலையில் புயல் கடந்த போது எவ்வளவு வேகத்தில் சூறாவளி காற்று வீசியது தெரியுமா? அடுத்து நெருங்கும் இடம் இதுதான்
இலங்கையின் திருகோணமலையை நேற்றிரவு கடந்த புரெவி புயல் தற்போது பாம்பனை நெருங்குகிறது.வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து தற்போது பாம்பனை புயலானது நெருங்கி வருகிறது.அதன்படி பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.பாம்பன்- கன்னியாகுமரி…
திரிகோணமலை அருகே மையம் கொண்ட புதிய புயல்! முக்கிய இடங்களுக்கு எச்சரிக்கை.. வலுவாக எங்கு கரையை கடக்கும் தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.இதோடு புரெவி புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புரெவி புயல் நேற்றிரவு எட்டரை மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.இந்த நிலையில் தற்போது திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.இதையடுத்து…
12 மணி நேரம் தான் இருக்கு! புதிய புயலால் 4 நாட்கள் வெளுத்து வாங்க போகும் கன மழை: எங்கெங்கு தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எங்கெங்கு எல்லாம் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் சென்னை உட்பட சில நகரங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு…
வெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…
இலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன்! யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…
என் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்
ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…

