Tags Tamil news france
Tag: tamil news france
கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் விழுந்த அதிர்ஷ்டம்! எவ்வளவு தெரியுமா?
கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்திங்டன் மற்றும் அவர் மகள் அலெக்சா ஆகிய இருவரும் மருத்துவமனை ஊழியர்கள் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.லொட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை சேர்ந்து தேர்வு செய்வது அவர்களின் வழக்கம். இந்த நிலையில் தாய் - மகள் வாங்கிய லொட்டரிக்கு $500,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து தெரசா கூறுகையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் இதை என்…
பிரான்சில் கத்தியுடன் பள்ளிக்குள் ஊடுருவ முயன்று பரபரப்பை கிளப்பிய மர்ம நபர்! வெளியான வீடியோ
பிரான்சில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் யூத பள்ளிக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Marseille நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது, நகரின் 13th arrondissement பகுதியில் உள்ள யூத பள்ளிக்குள் கத்தியுடன் மர்ம நபர் நுழைய முயன்றுள்ளான்.பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் மர்ம நபரை தடுத்த நிலையில் அவன் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்குள் ஓடியுள்ளான்.உடனே மர்ம நபர் குறித்து பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார மர்ம நபரை கைது…
பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து பிரான்ஸ் பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் பிரதமர் Jean Castex, வார இறுதி பொது முடக்கம் சனிக்கிழமையிலிருந்து Pas-de-Calais பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், Hautes-Alpes, Aisne மற்றும் Aube ஆகிய பகுதிகளில் அதிக கொரோனா பரவல் காணப்படுவதையடுத்து அவையும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள 23 பகுதிகளில் உள்ள பெரிய அத்தியாவசியமற்ற மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யாத 10,000 சதுர அடிக்கு அதிகமான இடப்பரப்பு கொண்ட…
மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய நபர்… பரிதாபமாக பலியான இந்தியப் பெண்: தீர்ப்பில் இரக்கம் காட்டிய நீதிபதி
மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய ஒரு கனேடியரால் இந்தியப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில், இரக்கத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்து 1996ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் அஞ்சனா ஷர்மா.அஞ்சனாவுக்கு சுனீத் ஷர்மா என்ற கணவரும், சானியா (19), ருத்ரான்ஷ் (15) மற்றும் ஆர்ச்சிஷா (12) என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம், கால்கரியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அஞ்சனா மீது கார் ஒன்று மோதியதில், அவர்…
கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக மாயமான 15 வயது சிறுமி! அவர் கடைசியாக இறக்கிவிடப்பட்டது எங்கே? வெளியான புகைப்படம்
கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.அனாகிஷா ஷன்சைன் தாமஸ் என்ற 15 வயதான சிறுமி கடந்த மாதம் 19ஆம் திகதி மணிடோபாவின் பெகுயிஸ் மாலில் இறக்கிவிடப்பட்டார்.இதன்பின்னர் அனாகிஷா காணாமல் போயிருக்கிறார்.அங்கிருந்து அவர் வின்னிபெக்கிற்கு சென்றிருக்கலாம் எனவும் அங்கு அவர் தற்போது இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.180 பவுண்ட் எடை கொண்ட அனாகிஷாவை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.…
விடுதலைப் போராளியின் கொலையை தற்கொலை என மூடி மறைத்த பிரான்ஸ்… உண்மையை ஒப்புக்கொண்ட மேக்ரான்
அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒருவரின் கொலையை மறைத்து, அது தற்கொலை என்று வெளி உலகுக்கு பிரான்ஸ் கூறிவிட்டதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் படைகள், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, விடுதலைப் போராளியான Ali Boumendjel என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டதாகவும், அதை தற்கொலை என கூறி மூடி மறைத்துவிட்டதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.Boumendjelஇன் பேரப்பிள்ளைகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, மேக்ரான் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.1954 முதல் 62 வரையிலான அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, இரண்டு நாடுகளிலும் அராஜக…
பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய குடும்பம்: உண்மையை மூடி மறைக்க முயல்கிறதா பிரான்ஸ்?
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர்.பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார்…
பிரான்சில் தீவிரமாக கொரோனா பரவி வரும் மாகாணம்! மருத்துவர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை
பிரான்சில் குறிப்பிட்ட மாகாணத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுடன் போராடி சோர்வடைந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் முன்பு இருந்ததை போல் இல்லாமல் இருந்தாலும், ஒரு சில மாகாணங்களில் வைரஸின் பரவல் என்பது மிகத் தீவிரமாக உள்ளது.அந்த கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவும் மாகாணத்தின் பட்டியலில் தான் இல் து பிரான்ஸ் முதல் இடத்தில் உள்ளது.இந்த மாகாணத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள்…
கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு: யூடியூபில் ஒளிபரப்பு
கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு யூடியூபில் ஒளிபரப்பாக உள்ளது.2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.அந்த கோர சம்பவத்தில் ரேணுகா அமரசிங்கா என்ற இலங்கைப்பெண் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, Minassian மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக்…
கனடாவில் தூங்கி எழுந்ததும் பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! கோடீஸ்வரர் ஆனதை உணர்ந்த அற்புத தருணம்
கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார்.மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன்.அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன்.என் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது, இவ்வளவு…